நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தெலுங்கு படமான ஜதிரத்னலு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பரியா அப்பதுல்லா. அந்த படம் வெற்றி பெற்றபோதும் பரியா அப்துல்லாவுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையில்லை. தற்போது 'தி ஜெங்காபுரு கர்ஸ்' என்கிற இந்தி வெப் தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் .சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் 'வள்ளி மயில்' படத்தின் மூலம் தமிழக்கு வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் பரியா அப்துல்லா தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது " எனது அக்கா சென்னையில் இருப்பதால் அடிக்கடி சென்னை வந்து நானும் தமிழ் கற்றுக் கொண்டேன். வள்ளி மயில் படப்பிடிப்பு தளத்திலும் தமிழ் கற்றேன். இப்போது தமிழ் பேசுவதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும், ஓரளவுக்கு பேசவும் முடியும்.
அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகை, ஆங்கில நாடகத்தில் நடித்திருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் இந்த படத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். இங்கு தெருக்கூத்து கலை பற்றி முறையாக பயிற்சி பெற்று நடிக்கிறேன். வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் பரியா அப்துல்லா.