திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தெலுங்கு படமான ஜதிரத்னலு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பரியா அப்பதுல்லா. அந்த படம் வெற்றி பெற்றபோதும் பரியா அப்துல்லாவுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையில்லை. தற்போது 'தி ஜெங்காபுரு கர்ஸ்' என்கிற இந்தி வெப் தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் .சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் 'வள்ளி மயில்' படத்தின் மூலம் தமிழக்கு வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் பரியா அப்துல்லா தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது " எனது அக்கா சென்னையில் இருப்பதால் அடிக்கடி சென்னை வந்து நானும் தமிழ் கற்றுக் கொண்டேன். வள்ளி மயில் படப்பிடிப்பு தளத்திலும் தமிழ் கற்றேன். இப்போது தமிழ் பேசுவதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும், ஓரளவுக்கு பேசவும் முடியும்.
அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகை, ஆங்கில நாடகத்தில் நடித்திருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் இந்த படத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். இங்கு தெருக்கூத்து கலை பற்றி முறையாக பயிற்சி பெற்று நடிக்கிறேன். வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் பரியா அப்துல்லா.