வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அதிகாலை காட்சியை திரையிடுவதற்கு தமிழகத்தில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் கர்நாடக மாநிலத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதால், அங்கு காலை 6 மணிக்கே ஜெயிலர் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் அதிகாலை முதல் காட்சி திரையிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஜெயிலர் படக்குழு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடத்தில் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.