300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கடந்த 2018ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அவை கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் படம் பேபி என்கிற திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியானது. இந்த படம் முதல் நாளிலிருந்தே வரவேற்பையும் வசூலையும் பெற துவங்கியது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டாவும் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன் பேசும்போது, 'நான் இங்கே புஷ்பா-2 படத்தைப் பற்றி பேச வரவில்லை. இருந்தாலும் இந்த வெற்றியை பார்க்கும்போது புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை இங்கே பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியவர், “இங்கே எல்லாமே ஒரே கட்டளையால் செய்து முடிக்கப்படும். அது புஷ்பாவின் கட்டளை” என்று கூறினார்.
புஷ்பா 2 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் வசனத்தையே அல்லு அர்ஜுன் கூறியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.