பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கடந்த 2018ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அவை கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் படம் பேபி என்கிற திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியானது. இந்த படம் முதல் நாளிலிருந்தே வரவேற்பையும் வசூலையும் பெற துவங்கியது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டாவும் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன் பேசும்போது, 'நான் இங்கே புஷ்பா-2 படத்தைப் பற்றி பேச வரவில்லை. இருந்தாலும் இந்த வெற்றியை பார்க்கும்போது புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை இங்கே பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியவர், “இங்கே எல்லாமே ஒரே கட்டளையால் செய்து முடிக்கப்படும். அது புஷ்பாவின் கட்டளை” என்று கூறினார்.
புஷ்பா 2 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் வசனத்தையே அல்லு அர்ஜுன் கூறியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.