இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சோலோ ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தற்போதுள்ள எல்லா நடிகைகளின் கனவாக இருக்கிறது. நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் மட்டுமல்லாது இரண்டாம் நிலையில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, சுனைனா போன்றவர்களும் சோலோ ஹீரோயினாக நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் லட்சுமி பிரியா சந்திரமவுலி.
மகிழ் திருமேனியின் முதல் படமான 'முன்தினம் பார்த்தேனே' படத்தில் அறிமுகமான லட்சுமி பிரியா, அதன்பிறகு சாந்தி நிலையம், தர்மயுத்தம், கவுரவம், கள்ளப்படம், யாகாவாராயினும் நாகாக்க, மாயா, கர்ணன், சொப்பன சுந்தரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வசந்த் சாய் இயக்கிய சிவரஞ்சனியும் சில பெண்களும் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது அவர் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படம் ஒன்றில் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார், சபர்தான் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சாய் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். அருவி மதன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.