சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

'தாமிரபரணி, பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி, விஷால் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஷாலின் 34வது படமாக உருவாக உள்ள இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன் படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பித்துள்ளனர். தற்போது படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
விஷால், பிரியா பவானி சங்கர் முதல் முறையாக ஜோடி சேரும் படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை வழக்கம் போல ஒரு ஆக்ஷன் படமாகத்தான் இயக்க உள்ளார் ஹரி. படத்திற்காக வெளியான போஸ்டரிலேயே இயக்குனர் ஹரி தன்னுடைய டிரேட் மார்க்கானை அரிவாளையும் டிசைனில் வைத்துள்ளார்.
இயக்குனர் ஹரி கடைசியாக இயக்கிய 'யானை' படம் கடந்தாண்டு வெளிவந்தது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விஷாலின் 34வது படத்தை ஆரம்பித்துள்ளார். யானை படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்து, தமிழகத்தின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு படமாக்கப்படவுள்ளது.