மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'தாமிரபரணி, பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி, விஷால் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஷாலின் 34வது படமாக உருவாக உள்ள இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன் படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பித்துள்ளனர். தற்போது படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
விஷால், பிரியா பவானி சங்கர் முதல் முறையாக ஜோடி சேரும் படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை வழக்கம் போல ஒரு ஆக்ஷன் படமாகத்தான் இயக்க உள்ளார் ஹரி. படத்திற்காக வெளியான போஸ்டரிலேயே இயக்குனர் ஹரி தன்னுடைய டிரேட் மார்க்கானை அரிவாளையும் டிசைனில் வைத்துள்ளார்.
இயக்குனர் ஹரி கடைசியாக இயக்கிய 'யானை' படம் கடந்தாண்டு வெளிவந்தது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விஷாலின் 34வது படத்தை ஆரம்பித்துள்ளார். யானை படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்து, தமிழகத்தின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு படமாக்கப்படவுள்ளது.