ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியவர் ரவீணா ரவி. தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான 'லவ் டுடே' படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மணப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் வெளியான 'மாமன்னன்' படத்தில் படத்தின் வில்லனான பகத் பாசில் மனைவியாக நடித்துள்ளார். படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இருக்கும் சிறிய கதாபாத்திரம். ஆனால், 'டப்பிங்' உலகில் கதாநாயகியான அவருக்கே படத்தில் ஒரு வசனம் கூட வைக்கவில்லை. படத்தில் அவருடைய குரலைக் கேட்கவே முடியாது. இது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலர் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ரவீணா ரவி, “இந்தப் படத்தில் நான் பகத் பாசிலின் ஜோடியாக நடித்துள்ளேன். குறைவான நேரம்தான் திரையில்… வசனங்களும் கிடையாது, இருந்தாலும் நட்சத்திர நடிகர்களுடன் நடித்தது எனக்கு ஆசீர்வாதம், திறமையான குழுவினர், ஏஆர் ரகுமான் இசை,” என இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோரையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.