ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக மாறினார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதன்பிறகு அவர் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதே ஷ்யாம்' ஆகியவை தோல்விப் படங்களாகவே அமைந்தன. குறிப்பிடத்தக்க வசூலையும் குவிக்கவில்லை.
அதற்கடுத்து கடந்த வாரம் வெளிவந்த 'ஆதிபுருஷ்' படமும் வெளியீட்டிற்கு முன்பு கடும் விமர்சனங்களைத்தான் பெற்றது. வெளியீட்டிற்குப் பின்பும் எதிர் விமர்சனங்களும், சர்ச்சைகளும் வந்தாலும் படம் நான்கு நாட்களில் 375 கோடி வசூலை அள்ளியுள்ளது. இதனால், பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'சலார்' படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நேற்று 'சலார்' படத்தின் 'கவுண்ட் டவுன்' போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். “சாட்சியாவதற்கு இன்னும் 100 நாட்கள்” என்ற வாசகங்களுடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. 'கேஜிஎப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வரும் படம் என்பதால் இப்படம் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் பெரும் வசூலைக் குவித்த 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, பதான்' ஆகிய படங்களின் வசூலை இப்படம் முறியடிக்கும் என்று இந்திய பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.