அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி |
'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக மாறினார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதன்பிறகு அவர் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதே ஷ்யாம்' ஆகியவை தோல்விப் படங்களாகவே அமைந்தன. குறிப்பிடத்தக்க வசூலையும் குவிக்கவில்லை.
அதற்கடுத்து கடந்த வாரம் வெளிவந்த 'ஆதிபுருஷ்' படமும் வெளியீட்டிற்கு முன்பு கடும் விமர்சனங்களைத்தான் பெற்றது. வெளியீட்டிற்குப் பின்பும் எதிர் விமர்சனங்களும், சர்ச்சைகளும் வந்தாலும் படம் நான்கு நாட்களில் 375 கோடி வசூலை அள்ளியுள்ளது. இதனால், பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'சலார்' படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நேற்று 'சலார்' படத்தின் 'கவுண்ட் டவுன்' போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். “சாட்சியாவதற்கு இன்னும் 100 நாட்கள்” என்ற வாசகங்களுடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. 'கேஜிஎப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வரும் படம் என்பதால் இப்படம் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் பெரும் வசூலைக் குவித்த 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, பதான்' ஆகிய படங்களின் வசூலை இப்படம் முறியடிக்கும் என்று இந்திய பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.