இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் தற்போது 'அழகிய கண்ணே' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். நடிகை சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திண்டுக்கல் லியோனி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லியோ சிவக்குமார் பேசியதாவது : இந்த மேடை எனக்குக் கனவு , சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது, எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி, இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். , எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார், இந்த படம் எனக்கு முதல் படி அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி என்றார்.
இந்த விழாவில் லியோனி கூறியது: “விஜய் சேதுபதிக்கு நன்றி. நான் கேட்டதும் உடனே சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார். என் மகன் என்பதற்காக இதை சொல்லவில்லை, கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்துள்ளார். அவர் உழைப்புக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.