புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா 2016ம் ஆண்டு 'ஓய்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். விக்ரம் பிரபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை லெமன் லீப் கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் 'மலை', அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்' படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். 'பர்மா' படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்க உள்ள படத்திற்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காளிகாம்பாள் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.