இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா 2016ம் ஆண்டு 'ஓய்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். விக்ரம் பிரபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை லெமன் லீப் கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் 'மலை', அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்' படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். 'பர்மா' படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்க உள்ள படத்திற்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காளிகாம்பாள் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.