மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மறுபக்கம் தனது அரசியல் பயணத்துக்கான அடுத்த கட்ட நகர்வுகளையும் செய்து வருகிறார். சமீபகாலமாக முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாவட்டம் வாரியாக அவரது மக்கள் இயக்கத்தினரை மாலை அணிவிக்க சொல்லி உத்தரவிட்டார். அடுத்தப்படியாக வறுமை ஒழிப்பு தினத்தில் மாவட்டம் தோறும் மதியம் ஒருவேளை உணவு வழங்கினார்.
இப்போது மாணவர்களை சந்திக்க உள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை சந்திக்கிறார். இதுதொடர்பாக விஜய் சார்பில் வெளியிட்ட அறிக்கை விபரம் வருமாறு....
‛‛சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வருகின்ற ஜூன் 17ம் தேதி அன்று நடந்து முடிந்த 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை அவரது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்'' என்று அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளனர்.