கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மறுபக்கம் தனது அரசியல் பயணத்துக்கான அடுத்த கட்ட நகர்வுகளையும் செய்து வருகிறார். சமீபகாலமாக முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாவட்டம் வாரியாக அவரது மக்கள் இயக்கத்தினரை மாலை அணிவிக்க சொல்லி உத்தரவிட்டார். அடுத்தப்படியாக வறுமை ஒழிப்பு தினத்தில் மாவட்டம் தோறும் மதியம் ஒருவேளை உணவு வழங்கினார்.
இப்போது மாணவர்களை சந்திக்க உள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை சந்திக்கிறார். இதுதொடர்பாக விஜய் சார்பில் வெளியிட்ட அறிக்கை விபரம் வருமாறு....
‛‛சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வருகின்ற ஜூன் 17ம் தேதி அன்று நடந்து முடிந்த 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை அவரது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்'' என்று அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளனர்.