ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மறுபக்கம் தனது அரசியல் பயணத்துக்கான அடுத்த கட்ட நகர்வுகளையும் செய்து வருகிறார். சமீபகாலமாக முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாவட்டம் வாரியாக அவரது மக்கள் இயக்கத்தினரை மாலை அணிவிக்க சொல்லி உத்தரவிட்டார். அடுத்தப்படியாக வறுமை ஒழிப்பு தினத்தில் மாவட்டம் தோறும் மதியம் ஒருவேளை உணவு வழங்கினார்.
இப்போது மாணவர்களை சந்திக்க உள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை சந்திக்கிறார். இதுதொடர்பாக விஜய் சார்பில் வெளியிட்ட அறிக்கை விபரம் வருமாறு....
‛‛சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வருகின்ற ஜூன் 17ம் தேதி அன்று நடந்து முடிந்த 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை அவரது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்'' என்று அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளனர்.