மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தாயின் தாலாட்டு பற்றி எல்லோருக்கும் தெரியும். தாயின் தாலாட்டு கேட்காமல் தூங்கியவர்கள் யாருமில்லை. கிராமிய பாடகர், திரைப்பட பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்ட அந்தோணிதாசன் தந்தையின் தாலாட்டு பாடல் ஒன்றை ஆல்பத்துக்காக பாடி உள்ளார். இதனை பா மியூசிக் மற்றும் கேன்வாஸ் ஸ்பேஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
"இந்தத் தாலாட்டை எழுதுவது எனக்கு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது. ஒரு தந்தையாக நான் உண்மையிலேயே ஆழ்ந்த அர்த்தமுள்ள தாலாட்டுப் பாடல் ஒன்றை உருவாக்க விரும்பினேன். என் மனதுக்கு நெருக்கமான இந்த அனுபவத்தை என்னுடைய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பாடலை பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் சமர்பிக்கிறேன்” என்கிறார் அந்தோணிதாசன்.