Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் 170வது படம் போலி என்கவுண்டர் கதையில் உருவாகிறது!

21 மே, 2023 - 04:00 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth's-170th-film-is-based-on-a-fake-encounter-story!

ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த் அதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மீண்டும் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 170வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. இப்படத்தை சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் ரஜினி 170வது படத்தின் கதை குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடிப்பதாகவும், போலி என்கவுண்டர் கதையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் தான் இயக்கிய ஜெய்பீம் படத்தை போலவே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்குகிறார் ஞானவேல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.2000 நோட்டு ‛வாபஸ்' மக்களுக்கு மகிழ்ச்சி: விஜய் ஆண்டனி சொன்ன கருத்து வைரல்ரூ.2000 நோட்டு ‛வாபஸ்' மக்களுக்கு ... தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்! தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)