துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நாயகன், கானல் நீர், பெண் சிங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் ராமநாதபுரத்தில் இருந்து திமுக எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் தனது 46 வயதிலேயே மரணம் அடைந்தார் ஜே.கே. ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி என்பவர் காரைக்குடியில் நகை தொழில் வியாபாரம் செய்து வரும் திருச்செல்வம் என்பவரிடத்தில் 60 லட்சம் ரூபாய்க்கு தங்க, வைர நகைகளை வாங்கி இருக்கிறார். அதற்கான பணத்தை கொடுக்காமல் இருபது லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன் பிறகும் சொன்னபடி அந்த பணத்தை அவர் தராததால் ஜோதீஸ்வரி மீது காரைக்குடி நீதிமன்றத்தில் திருச்செல்வம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோதீஸ்வரிக்கு ரூபாய் 60 லட்சம் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.