சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நாயகன், கானல் நீர், பெண் சிங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் ராமநாதபுரத்தில் இருந்து திமுக எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் தனது 46 வயதிலேயே மரணம் அடைந்தார் ஜே.கே. ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி என்பவர் காரைக்குடியில் நகை தொழில் வியாபாரம் செய்து வரும் திருச்செல்வம் என்பவரிடத்தில் 60 லட்சம் ரூபாய்க்கு தங்க, வைர நகைகளை வாங்கி இருக்கிறார். அதற்கான பணத்தை கொடுக்காமல் இருபது லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன் பிறகும் சொன்னபடி அந்த பணத்தை அவர் தராததால் ஜோதீஸ்வரி மீது காரைக்குடி நீதிமன்றத்தில் திருச்செல்வம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோதீஸ்வரிக்கு ரூபாய் 60 லட்சம் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.




