நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி |
மேற்கு தொடர்ச்சி மலை, ஆரஞ்சு மிட்டாய், ஆயிரத்தில் ஒருவன், கடல், திரௌபதி, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆறுபாலா. தற்போது இயக்குனராக மாறி உள்ள ஆறுபாலா 'போர்குடி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், ஆராதயா உள்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது, அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை, அதாவது 'போர்குடி' என்று குறிப்பிடப்படும் ஒரு ஜாதியை உயர்த்தி பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து நெல்லையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆறுபாலா விளக்களித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஒரு நல்ல நோக்கத்திற்காத்தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது தவறாக பயன்படுத்தப்படுவதால் இரு சமூக மக்களுமே பாதிக்கப்படுகிறார்கள். நிறைய இழப்புகளை சந்திக்கிறார்கள். அதைப் பற்றித்தான் இந்த படம் பேசுகிறதே தவிர எந்த ஜாதியை உயர்த்தியும், எந்த ஜாதியை தாழ்த்தியும் பேசவில்லை. ஆதிக்க சாதி. அதிகார வர்க்கம் என்ற குற்றச்சாட்டுகளை வைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேலும் பாதாளத்திற்கு தள்ளும் முயற்சியை பற்றி பேசுகிறது. அனைத்து சமூகமும் தங்களுடைய இழப்புகளை திரையில் காட்டி தங்களுடைய நியாயத்தை புரிய வைக்க எடுக்கும் முயற்சி போல் இந்த சமூகத்திற்கான இழப்புகளையும் நியாயத்தையும் புரிய வைக்கும் முயற்சி இது. என்றார்.