பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் விஜய் இப்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தபோது, ‛திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், வடசென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், ஏழைகளுக்குத் தினமும் விலையில்லா விருந்து வழங்கி வருகின்றனர்.
சில பகுதிகளில் காலை, மதியம் என 2 வேளை உணவு வழங்கி வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் செய்யும் மன்றத்தினரைப் பாராட்ட வேண்டும் என்று நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி அவர்களைச் சென்னைக்கு அழைத்து நேற்று பாராட்டினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்' என்றனர்.