நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் விஜய் இப்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தபோது, ‛திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், வடசென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், ஏழைகளுக்குத் தினமும் விலையில்லா விருந்து வழங்கி வருகின்றனர்.
சில பகுதிகளில் காலை, மதியம் என 2 வேளை உணவு வழங்கி வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் செய்யும் மன்றத்தினரைப் பாராட்ட வேண்டும் என்று நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி அவர்களைச் சென்னைக்கு அழைத்து நேற்று பாராட்டினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்' என்றனர்.