சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் |
மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் சம்யுக்தா. சமீபத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் சம்யுக்தா இணைந்து நடித்த படம் விருபாக்சா. தெலுங்கில் இப்பபடம் நல்ல வரவேற்பைப் பெற்றது .இதைதொடர்ந்து இப்படம் தமிழில் வரும் மே 5 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சம்யுக்தா பேசியது; "இனிவரும் காலங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்ற கேள்வியே வராத வகையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். இங்கு நிறைய திறமையான நடிகைகள் உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் வர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் கேட்டுகொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.