ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! |
தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கிய 5 மணிக்கு முடிந்தது.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தலைவர் பதவிக்கு தற்போது பதவியில் உள்ள முரளி ராமசாமி, மற்றொரு அணியில் இருந்து மன்னன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி சேகரன், ராஜேஸ்வரி வேந்தன், தமிழ்குமரன் மற்றும் விடியல் ராஜூ; செயலர் பதவிக்கு பி.எல்.தேனப்பன், கமீலாநாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களாக, 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இதற்கு, நடிகை தேவயானி உட்பட, 77 பேர் போட்டியில் உள்ளனர்.
இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், பூர்ணிமா, சுஹாசினி, அமீர், சசிகுமார், ஆர்.கே.செல்வமணி, தாணு, ராதாரவி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், தேவயானி, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்தனர். ஓட்டுகள் நாளை காலை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.