லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாவது அதிகரித்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், ஜெயமோகன் எழுதிய துணைவன் (விடுதலை), வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவல்கள் படமாகி வருகிறது. இந்த நிலையில் துரை குணா எழுதிய 'ஊரார் வரைந்த ஓவியம்' என்ற நாவல் 'அம்புநாடு ஒம்பது குப்பம்' என்ற பெயரில் சினிமாவாகிறது.
இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, புதுமுகங்கள் விக்ரம், சுருதி, பிரபுமாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அந்தோணி தாசன், ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளனர்.
ஜி.ராஜாஜி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது “சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட "ஊரார் வரைந்த ஓவியம்" என்கிற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம். புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்” என்றார்.