மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாவது அதிகரித்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், ஜெயமோகன் எழுதிய துணைவன் (விடுதலை), வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவல்கள் படமாகி வருகிறது. இந்த நிலையில் துரை குணா எழுதிய 'ஊரார் வரைந்த ஓவியம்' என்ற நாவல் 'அம்புநாடு ஒம்பது குப்பம்' என்ற பெயரில் சினிமாவாகிறது.
இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, புதுமுகங்கள் விக்ரம், சுருதி, பிரபுமாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அந்தோணி தாசன், ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளனர்.
ஜி.ராஜாஜி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது “சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட "ஊரார் வரைந்த ஓவியம்" என்கிற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம். புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்” என்றார்.