பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் படத்திற்குப் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக ராம்சரண் பட எண்ணிக்கையைக் குறிப்பிடும் விதத்தில் 'ஆர்சி 15' என அழைக்கப்பட்டு வந்த படத்தின் பெயரை இன்று(மார்ச் 27) ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.
'கேம் சேஞ்சர்' என படத்திற்குப் பெயர் வைத்து அதற்கான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். முதலில் இப்படத்திற்கு 'சிஇஓ' எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவையனைத்தையும் பொய்யாக்கி புதிய பெயரை அறிவித்துள்ளார்கள். மோஷன் போஸ்டர் காட்சிகள் அனைத்தும் அரசியல் தொடர்பான கிளிப்பிங்காக உள்ளன. எனவே இந்தப்படம் நிச்சயம் அரசியல் சார்ந்து பேசப்போகும் படம் என தெரிகிறது.
கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளிவரும் படம் என்பதால் பான் இந்தியா படமாக இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.