புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல பாலிவுட் காமெடி நடிகர் கியாலி சஹாரன். 'சிங் இஸ் எ கிங்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். அதோடு பல சமூக சேவைகளும் செய்து வருகிறவர். இவர் மீது தற்போது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
25 வயது இளம் பெண் ஒருவர் ராஜஸ்தானின் மானசரோவர் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் நடிகர் கியாலி சஹாரன் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், அந்த ஓட்டலில் அழைக்கப்பட்ட பெண்களுக்கு தனித்தனி அறை எடுத்து கொடுத்து அங்கு இன்டர்வியூ என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அதில் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டதாகவும், மாட்டிக் கொண்ட தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து கியாலி சஹாரன் மீது போலீசார் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கியாலி சஹாரன் கைதாகலாம் என்று தெரிகிறது.