சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
8 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த படம் ஐ. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்த படத்தை புதுச்சேரி மாநிலத்தில் விநியோகம் செய்ய ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் என்ற நிறுவனம் உரிமம் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் புதுச்சேரி அரசிடம் வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தது. இதற்கு அரசு மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து விநியோக நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் “திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக அரசு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனாலும் கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பதுதான் சட்டம். அதைத்தான் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும், தமிழில் பெயர் வைத்ததற்காகவே வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு வழக்கும், தள்ளுபடியும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.