பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து ஹிந்தியில் படங்களை இயக்கி பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக மாறியவர் ராம்கோபால் வர்மா. அவரது படங்கள் ரியலிஸ்டிக்காக இருக்கும் என்பதுடன் பல நேரங்களில் சர்ச்சைகளையும் கிளப்பும். இன்னொரு பக்கம் அவர் வெளியிடும் சோசியல் மீடியா பதிவுகளும் தங்களது பங்கிற்கு ஏதாவது சர்ச்சையை கிளப்புவதும் வழக்கம். இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தன்னுடைய பி டெக் டிகிரியை முடித்ததற்கான சான்றிதழை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து தற்போது தான் படித்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பெற்றுள்ளார்.
ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் 1985ல் சிவில் இன்ஜினியரிங்கில் பி டெக் படிப்பை முடித்தார் ராம்கோபால் வர்மா. ஆனால் தொடர்ந்து, படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்க விருப்பம் இல்லாமல் சினிமாவில் நுழையும் ஆர்வத்தில் இருந்ததால் தனது டிகிரி சான்றிதழை இதுவரை வாங்காமலேயே இருந்தார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தற்போது பல்கலைக்கழகத்திற்கு நேரிலேயே சென்று அந்த பட்டத்தை பெற்றுள்ளதுடன் அதுகுறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.