ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் குமரன் தங்கராஜன். சினிமாவிலிருந்து சீரியலுக்கு நடிக்க வந்த இவருக்கு மீண்டும் சினிமா வட்டாரத்தில் நுழையும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அண்மையில் ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வதந்தி வெப்சீரிஸில் குமரன் தங்கராஜன் நடித்திருந்தார். அதில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, மாயாதோட்டா என்ற புதிய வெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பும் குமரனுக்கு கிடைத்தது. ஹிந்தி ஓடிடியான ஹங்காமா ப்ளேயில் இந்த தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வரிசையாக வெப்சீரியஸில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் குமரன் இனி பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள குமரன், 'பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வதந்தி, மாயத்தோட்டா வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துவிட்டேன். ஆனால், இனிவரும் காலங்களில் திரைப்படங்கள், வெப்சீரிஸ்களில் நடிக்கும் போது கால்ஷீட் கொடுக்க நேரம் இல்லாமல் போனால் கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிடுவேன்' என்று கூறியுள்ளார்.
மாயத்தோட்டாவுக்கு பிறகு குமரன் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனவே, இன்னும் சில நாட்கள் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நீடிப்பார் என ரசிகர்கள் திருப்தியடைந்துள்ளனர்.
--