நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பென்னி தயாள், அண்மையில் சென்னை விஐடி கல்லூரியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேடையில் அவர் பாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா ஒன்று அவரது தலையில் மோதியது. இதனால் வலி தாங்க முடியாமல் பென்னி தயாள் மேடையிலேயே சுருண்டு உட்கார்ந்தார். இதன் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், தனக்கு நடந்த விபத்து குறித்து விளக்கமளித்த பென்னி தயாள், 'ட்ரோனின் இறக்கை தலையின் பின்புறம் தாக்கிய போது தடுக்க முயன்றேன். அப்போது இறக்கை கைவிரல்களில் பட்டு காயம் ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் புரொபஷ்னல் ட்ரோன் ஆப்ரேட்டர்களை அமர்த்துங்கள். அனைத்து கலைஞர்களும் ஒப்பந்தத்தின் போது ட்ரோன் நமது அருகில் நெருங்க முடியாததை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் கலைஞர்கள், மேடையில் பாடுகிறோம். இது விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வழக்கமான ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.