ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தெலுங்குத் திரையுலகத்தில் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ஆக்டிவ் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு முக்கிய சங்கங்கள் உள்ளன. தொடர்ந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருப்பவர்கள் இணைந்து ஆக்டிவ் சங்கத்தை உருவாக்கினார்கள். அந்த சங்கத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த 76 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2023 முதல் 2025 வரையிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு ஆதரவுடன் ஒரு குழுவும், தயாரிப்பாளர் கல்யாண் ஆதரவுடன் மற்றொரு குழுவும் களத்தில் இறங்கின. இதில் தில் ராஜு ஆதரவிலான குழுவினர்தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
தலைவராக தாமோதர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15 செயற்குழு உறுப்பினர்களில் தில் ராஜு அதிகபட்சமாமக 470 வாக்குகளை வாங்கியுள்ளார். இதுவரை நடைபெற்ற தேர்தலில் ஒருவர் வாங்கிய அதிகபட்சமான வாக்குகள் இதுதானாம். தலைவர் பதவிக்குத் தேர்வானவருக்குக் கூட 339 வாக்குகள் பெற்றுதான் தலைவர் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தை, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைப்பதற்காக விதிகளை மாற்றவும் முடிவு செய்துள்ளார்களாம்.
தமிழ்த் திரையுலகத்திலும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என ஒரு சங்கமும், ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கம் என இன்னொரு சங்கமும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு மார்ச் மாதம் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு இங்கும் இரண்டு சங்கங்களும் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.