‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், தமிழில் ஹே சினாமிகா மற்றும் இந்தியில் சுப் என மொழிக்கு ஒன்றாக அவரது நான்கு படங்கள் வெளியாகின. இதில் சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தநிலையில் தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் துல்கர் சல்மான் உரையாடினார். அவரிடம் ரசிகர் ஒருவர், இந்த 2023வது வருடத்தில் அவருடைய இரண்டு படங்களை பார்க்க விரும்புகிறேன் என்றும் அதுவும் இரண்டு பண்டிகை கால சீசனில் அவரது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பையும் ஒரு மாதத்திற்குள் முடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.. இதற்கு நான் சீரியஸாக முயற்சிக்கிறேன் ஆனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பால் என்னுடைய படங்களின் படப்பிடிப்பும் ரிலீஸ் தேதியும் தாமதமாகிக் கொண்டே வருகிறது என்று கூறியுள்ளார்.