கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகமும், ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவும் இணைந்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவை மும்பையில் நடத்துகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளை(31) வரை நடக்கிறது. இந்த விழாவில் தொடக்க திரைப்படமாக ஊர்வசி நடித்த அவரது 700வது திரைப்படமான அப்பத்தா திரையிடப்பட்டது. இந்த படத்தில் அவர் மகன்களால் கைவிடப்பட்ட ஒரு தாயாக நடித்திருந்தார்.
ஷாங்காய் பட விழாவில் அப்பத்தா திரையிடப்பட்டது குறித்து படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது “இந்த அழகான படத்தின் கதையை என்னிடம் கொண்டு வந்த எழுத்தாளருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவர்கள் என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண நானும் ஆவலாக இருந்தேன். ஊர்வசி போன்ற திறமையான கலைஞருடன் அவரது 700வது படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். இது எனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது” என்றார்.