பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகமும், ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவும் இணைந்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவை மும்பையில் நடத்துகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளை(31) வரை நடக்கிறது. இந்த விழாவில் தொடக்க திரைப்படமாக ஊர்வசி நடித்த அவரது 700வது திரைப்படமான அப்பத்தா திரையிடப்பட்டது. இந்த படத்தில் அவர் மகன்களால் கைவிடப்பட்ட ஒரு தாயாக நடித்திருந்தார்.
ஷாங்காய் பட விழாவில் அப்பத்தா திரையிடப்பட்டது குறித்து படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது “இந்த அழகான படத்தின் கதையை என்னிடம் கொண்டு வந்த எழுத்தாளருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவர்கள் என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண நானும் ஆவலாக இருந்தேன். ஊர்வசி போன்ற திறமையான கலைஞருடன் அவரது 700வது படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். இது எனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது” என்றார்.