ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை |

தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் தற்போது வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட்டில் வெளியான காட்ஷில்லா, அவதார் போன்ற படங்களில் பணியாற்றிய டிஜிட்டல் நிறுவனமே இந்த வாடிவாசல் படத்திற்கும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெற்றி மாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதால் இந்த வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால் சூர்யா தனது 42வது படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் உடனடியாக வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை எஸ். தாணு தயாரிக்கிறார்.