பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தின் படப்பிடிப்பு எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா ஐந்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பீரியட் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அந்த வகையில் பிப்ரவரி, மார்ச் மாத இறுதிக்குள் சூர்யா 42வது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் இதுவரை சூர்யா நடித்த படங்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.