பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
இந்தியாவில் பைக் சுற்றுப் பயணத்தை முடித்துள்ள அஜித் அடுத்து உலக பயணத்தை தொடர இருக்கிறார். இந்த நிலையில் இந்திய சுற்று பயணத்தில் அவருடன் இருந்த நண்பர் உதயகுமார், அஜித்துடன் நடந்த உரையாடல் குறித்து தனது சமூகவலைதளத்தில் எழுதியிருப்பதாவது:
எதிர்மறையான விமர்சனங்கள், வெறுப்பூட்டும் செய்திகள், ட்ரோல்கள், எதிர்மறையான மீம்ஸ்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்று அஜித்திடம் கேட்டேன். அதற்கு அவர் ஒரு குட்டி கதையை பதிலாக சொன்னார்.
இத்தகைய செயல்களை நிறுத்துமாறு சொல்வது, இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதை நிறுத்துமாறு கசாப்புக் கடைக்காரரிடம் கோரிக்கை வைப்பதைப் போன்றது. அப்படி அவரிடம் சொன்னால், அவர், அசைவைப் பிரியர்களும் இங்கே இருக்கிறார்கள், அதற்கு சந்தை இருக்கிறது என்று நிச்சயமாகப் பதிலளிப்பார்.
அப்படி அவர் அதை செய்யாமல் விட்டுவிட்டால், நிச்சயம் வேறு யாராவது ஒருவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவ்வாறு செய்வார். அதேபோல் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அத்தகைய ட்ரோல்களையும், எதிர்மறை விமர்சனங்களையும் விரும்புகிறார்கள். மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்காத வரையில் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். என்று கூறினார்.
இவ்வாறு உதயகுமார் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.