பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களுக்குப் பிறகு விக்ரம், ராக்கெட்ரி போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. அதையடுத்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தவர், முதல் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு கதையில் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்தில் இருந்து விலகினார். அதை அடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
மேலும் இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா இயக்கும் படங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது வாடிவாசல் படத்திலிருந்தும் சூர்யா விலகிவிட்டதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வாடிவாசல் படத்திற்கு சூர்யா ஏற்கனவே கால்சீட் கொடுத்திருந்த நிலையில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தொடங்கியதால் அந்த கால் சீட்டை சிறுத்தை சிவாவுக்கு கொடுத்து தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இப்படியான நிலையில்தான் தற்போது வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனபோதிலும் இந்த செய்தியை வாடிவாசல் படக்குழுவினர் மறுக்கிறார்கள். தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தை தொடங்க போகிறார். அதனால் இப்படம் ட்ராப் ஆகி விட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்கிறார்கள்.