பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
சென்னையைச் சேர்ந்த, 'டேக் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தாக்கல் செய்த மனு: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத் தயாரிப்புக்காக, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோ மற்றும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம், 5 கோடி ரூபாய் கடனாக, எங்கள் நிறுவனத்திடம் பெற்றது. கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் 6.92 கோடி ரூபாய் தர உத்தரவிடக் கோரி, வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள தியேட்டர்களில், ஹீரோ படத்துக்கு வசூலாகும் தொகையை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டது. பணம் கொடுக்க வேண்டிய பொறுப்பு, சிவகார்த்திகேயனுக்கும் உள்ளது. அவரையும் சேர்த்து தான், நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவரை, ஹீரோ படத்தின் வாயிலாக வசூலான தொகையை செலுத்த, சிவகார்த்திகேயன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிரின்ஸ் படத்துக்காக, 30 கோடி ரூபாய் சம்பளம், அவருக்கு கிடைக்கிறது. அந்த சம்பளத் தொகையை முடக்கி வைத்தால் தான், எங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்கும். எனவே, சிவகார்த்திகேயனுக்கு தர வேண்டிய சம்பளத்தை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி, அப்படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி சரவணன் முன், விசாரணைக்கு வந்தது. பிரின்ஸ் படத்தில் பெற்ற சம்பளத்தை, இவ்வழக்கில் கோரப்பட்ட தொகைக்காக செலுத்த, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உத்தரவிடும்படி, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. சிவகார்த்திகேயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், 'நடிகர் என்ற முறையில், சம்பளம் பெற்று நடிக்கிறார். தயாரிப்பு பணிகளுக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை; துன்புறுத்தும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது' என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நடிகரின் சம்பளத்தை செலுத்தக் கோரிய மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.