அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா . அதன் பிறகு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்ட பிறகு படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஆந்திர அரசியலில் களம் இறங்கினார். அந்த வகையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இரண்டு முறை எம்எல்ஏவான ரோஜா, தற்போது அக்கட்சியில் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் பல விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து வரும் ரோஜா, சமீபத்தில் ஒரு கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தபோது தானும் களத்தில் இறங்கி கபடி விளையாடினார். இந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு பாக்சிங் போட்டியை தொடங்கி வைத்துள்ளார் ரோஜா. அப்போது தானும் கைகளில் கிளவுசை மாட்டிக் கொண்டு களத்தில் இறங்கி பாக்சிங் விளையாடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.