மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அஜித் தற்போது பைக் சுற்றுப் பயணத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தாய்லாந்து, கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி என பல இடங்களுக்கு பைக்கில் சுற்று பயணம் செய்தார். தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடித்து முடித்து விட்டு 6 மாதங்கள் மீண்டும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் உலக பைக் பயணத்தின் ஒரு பகுதியை அஜித் முடித்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு : "நடிகர் அஜித்குமார் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்திருப்பதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்ற திட்டத்தின் முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். மேலும், அவர் இந்தியாவில் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் அவருக்கு நிறைய அன்பு மக்களிடம் இருந்து கிடைத்தது. அட்வென்ச்சர் ரைடர்ஸ் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்" என பதிவிட்டுள்ளார்.