இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
அஜித் தற்போது பைக் சுற்றுப் பயணத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தாய்லாந்து, கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி என பல இடங்களுக்கு பைக்கில் சுற்று பயணம் செய்தார். தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடித்து முடித்து விட்டு 6 மாதங்கள் மீண்டும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் உலக பைக் பயணத்தின் ஒரு பகுதியை அஜித் முடித்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு : "நடிகர் அஜித்குமார் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்திருப்பதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்ற திட்டத்தின் முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். மேலும், அவர் இந்தியாவில் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் அவருக்கு நிறைய அன்பு மக்களிடம் இருந்து கிடைத்தது. அட்வென்ச்சர் ரைடர்ஸ் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்" என பதிவிட்டுள்ளார்.