ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தயாரிப்பாளர் கதிரேசனின் தயாரிப்பில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து 2014ம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி இருந்தார். மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்க, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .