மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றவர் தெருக்குரல் அறிவு. இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி ரெய்டு' பாடலின் மூலம் பிரபலமானார். தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தெருக்குரல் அறிவு தற்போது தான் காதலில் விழுந்ததை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள பதிவில் "என் திமிரான தமிழச்சி" எனக் குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்ற பெண்ணைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.