காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
'பிரேமம், நேரம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் உருவான மலையாளப் படமான 'கோல்டு' படத்தை தமிழிலும் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
மலையாளத்தில் டிசம்பர் 1ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழகத்தில் தமிழில் அன்று வெளியாகவில்லை. படத்தின் டப்பிங் வேலையில் ஏற்பட்ட தாமதம் அதற்குக் காரணம் என்றார்கள். நேற்று டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இரண்டு நாளாகியும் இன்று வரை படம் தமிழில் வெளியாகாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மலையாளத்தில் மட்டும் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கான விமர்சனங்கள் மிகவும் நெகட்டிவாக வந்து கொண்டிருக்கின்றன. மலையாளத்திலேயே படம் தோல்வியைத் தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால், படத்தின் தமிழகத்திற்கான தமிழ் வெளியீட்டு உரிமையை வாங்கிய வினியோகஸ்தரான கோவை சுப்பையா அட்வான்ஸ் தொகை கொடுத்ததைத் தவிர மேற்கொண்டு எந்தத் தொகையும் தர மாட்டேன் என சொல்லியிருக்கிறார். அதற்கு மலையாளப் படத் தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லையாம், பேசியபடி முழு தொகையையும் கேட்டிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இழுபறி நீடிக்கிறதாம்.
தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் சில தியேட்டர்களில் தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது. படம் தோல்வி என்று செய்திகள் வந்தபின் தமிழகத்தில் இப்படம் வெளியாவது கேள்விக்குறி ஆகிவிட்டது. இருப்பினும் அடுத்தவாரம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.