புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த ஆண்டு வெளிவந்த ‛தேன்' படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும், பல விருதுகளையும் பெற்றது. கணேஷ் விநாயகம் இயக்கி இருந்த இந்த படத்தில் தருண் குமார், அபர்ணதி, அருள்தாஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார், சனத் பரத்வாஜ் இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் தனது அடுத்து படம் குறித்து அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சரியாக சென்றடையும்.
பலதரப்பட்ட திரைப்பட திரைப்பட வல்லுர்களிடம் இந்த கதையை ஒப்படைத்தபோது அவர்கள் படித்துவிட்டு இது இந்திய மக்களிடம் மட்டுமின்றி உலக மக்களிடம் சரியாக சென்றடையும் என்று பாராட்டியுள்ளார்கள். இதுவும் விருதை நோக்கி நகர்கிறதா என்று எனக்கு தெரியாது, கண்டிப்பாக மக்களுக்கான படமாக இது இருக்கும். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளோம். இதற்கான நடிகர்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.