மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்புக்கு யானைகள் கொண்டு வரப்பட்டது. அனுமதியின்றி யானைகளை நடிக்க வைப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே நின்று கொண்டு அங்குள்ள மக்களிடம் யானைகள் குறித்த நேர்காணல் செய்து வந்தனர்.
இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை கைது செய்தனர். அதில் சிலர் தற்போது தலைமைறவாக உள்ளனர்.
படப்பிடிப்பை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்தனர் அதை நாங்கள் தடுத்தோம். அவர்கள் எங்களை தாக்கினார்கள் என்று விஜய் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள். டிரோன் கேமரா பயன்படுத்தவில்லை. படப்பிடிப்பில் அனுமதி இன்றி யானைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை உறுதி செய்யவே சென்றோம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பதிவு செய்யவில்லை என்று சேனல் தரப்பு கூறியுள்ளது.