படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

53வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்படுகிறது. நேற்று நடந்த துவக்க விழாவில் நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி அனுராக் தாக்குர் விழாவை முறைப்படி துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ஆண்டுதோறும் சிறந்த சினிமா ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனையாளர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு அந்த விருதினை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெறுகிறார். இதனை மத்திய தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்த விருதை வகீதா ரகுமான், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமிதாப் பச்சன், சலிம்கான், பிஸ்வஜித் சட்டர்ஜி, ஹேமமாலினி, பரசூன் ஜோஷி ஆகியோர் பெற்றுள்ளனர்.