கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஹரி இயக்கிய யானை படத்தை அடுத்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த நிலையில் நேற்று அவர் தனது 45வது பிறந்த நாளை சென்னையில் உள்ள உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதோடு அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கியதோடு தானும் மதிய உணவை அந்த குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார் அருண் விஜய்.
மேலும் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானமும் செய்திருக்கிறார் அருண் விஜய். அவர் மட்டுமின்றி அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்ததானம் செய்துள்ளார்கள். ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து அருண் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.