ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்று விட்டதாக இயக்குனர் நெல்சன் ஒரு தகவல் கொடுத்து இருக்கிறார்.
அதோடு இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களை விட இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அந்த படங்களை விட இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ள நெல்சன், இந்த ஜெயிலர் படத்தில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான ரஜினியை பார்க்கலாம் . அதேபோல் கதைக்களமும் வித்தியாசமாகவும் சீன் பை சீன் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்க வகையிலும் திரைக்கதை அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன்.