22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
தற்போது புதிய படங்கள்கூட தியேட்டரில் வெளியான ஒரு சில வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியாகி இன்னும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிற பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ஓடிடிக்கு வந்து விட்டன. சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் 4 வாரங்களில் ஓடிடிக்கு வந்தது.
இதனால் வசூல் பாதிப்பதாக தியேட்டர் அதிபர்கள் கருதுகிறார்கள். படம் தியேட்டரில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்து வலுவிழந்திருப்பதால் இதனை கண்டிப்புடன் செயல்படுத்த முடியவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சங்க உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "தயாரிப்பாளர் சங்கம் கேஆர்ஜி, ராம நாராணயன் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. சமீபகாலமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அக்கறை காட்டவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இது குறித்து முக்கியமான ஒரு முடிவெடுக்க வேண்டியது இருக்கிறது. இதுகுறித்து ஒரு கலந்தாய்வு கூட்டத்தை தியேட்டர் அதிபர்கள் சங்கம் நடத்த இருக்கிறது" என்று எழுதியுள்ளார்.