நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

சமீப வருடங்களாக கன்னட சினிமா தமிழ் மற்றும் தெலுங்கு, ஏன் மலையாள படங்களுக்கு கூட சவால் விடும் வகையில் மிக அருமையான கதைகளுடனும் கமர்ஷியலாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. கேஜிஎப்-2 மூலமாக ஹிந்தி சினிமாவில் கூட தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அந்த வகையில் கன்னட இளம் நடிகர்கள் சிலர் பான் இந்தியா நடிகர்களாக மாறி வருகின்றனர். இந்தநிலையில் கன்னட சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமாரும் கன்னட எல்லையை தாண்டி பான் இந்தியா நடிகராக மாற விரும்புகிறார். அந்த வகையில் தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடனும் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்தநிலையில் கன்னடத்தில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளியாகும் விதமாக உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவராஜ்குமார். இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழில் தற்போது விக்ரம் பிரபு, வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள ‛பாயும் ஒளி நீ எனக்கு' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ள படத்தயாரிப்பு நிறுவனம் சிவராஜ்குமார், கார்த்திக் அத்வைத் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளது.