ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் பிரம்மாண்டத்திலோ, அதில் நடிக்கும் பெரிய நடிகர்களிடத்திலோ இல்லை என்பதை அவ்வப்போது சில படங்கள் நிரூபித்து வருகின்றன. ஒரு படத்திற்கு கதையும், அதைச் சொல்லும் விதமும்தான் முக்கியம் என்பதை சமீபத்தில் வெளிவந்த கன்னடப் படமான 'காந்தாரா' நிரூபித்திருக்கிறது.
சுமார் ரூ.15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போது நான்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்துள்ளது. கர்நாடகாவில் மட்டுமே இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்தும், மற்ற மாநிலங்களில் சுமார் ரூ.40 கோடி, வெளிநாடுகளில் ரூ.10 கோடி எனக் கடந்து ரூ.150 கோடிக்கும் அதிகமாக நிகர வசூலைப் பெற்றுள்ளதாம்.
'காந்தாரா' படத்தைத் தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் இதற்கு முன்பு வெளிவந்து ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'கேஜிஎப் 2' படத்தின் பட்ஜெட்டே ரூ.100 கோடிக்கும் குறைவுதான். அந்தப் படத்திலேயே 1000 கோடி வரை, அதாவது 10 மடங்கு லாபம் பார்த்தார்கள். அது போல இப்போது 'காந்தாரா' படத்தின் மூலமும் ரூ.10 மடங்கு லாபத்தைப் பார்ப்பார்கள் என கர்நாடகா பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.