ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! | ‛லப்பர் பந்து' வெளியான அதே நாளில் அடுத்த படத்தை அறிவித்த இயக்குனர்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ! | அக். 31க்கு திரைக்கு வரும் ‛ஆண் பாவம் பொல்லாதது' |
கர்நாடகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி திலக்ராஜின் மகன் ஜெயித்கான் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடித்திருக்கும் படம் பனாரஸ். ஜெயதீரா இயக்கி உள்ளார். ஜெயித்கானுக்கு ஜோடியாக சோனல் மாண்டீரா நடித்துள்ளார். இவர் துளு மற்றும் கன்னட மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரின் மகன் தான் ஹீரோ என்பதால் படத்தின் விளம்பரங்களில் ஹீரோ ஜெயித் கான் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். இது குறித்து தனது ஆதங்கத்தை சோனல் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து அவர் பேசியதாவது: இதற்கு முன் 10 படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும் இது என் வாழ்வின் முக்கியமான படம். இவ்வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு என் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன். விளம்பர டிசைன்களில் நாயகன் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவருக்கு இது முதல் படம் என்பதால் அவரை சற்று கூடுதலாக புரமோட் செய்வதில் தவறில்லை. என்றார்.
படத்தின் நாயகன் ஜெயித் கான் பேசியதாவது: நான் அரசியல் குடும்பத்துப் பிள்ளை என்பதால் சினிமாத் துறைக்கு வருவதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அப்பா நான் சினிமாவுக்குள் வருவதை கடுமையாக எதிர்த்தார். அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து கன்வின்ஸ் செய்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். வரும் நவம்பர் 4ம் தேதியன்று கன்னடம், தமிழ்,மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. என்றார்.