'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
நடிகர் போண்டா மணி உயிருக்கு போராடுகிறார். அவருக்கு உதவுங்கள் என நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் போண்டா மணி. இலங்கையை சேர்ந்த இவர் 'பவுனு பவுனுதான்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
போண்டாமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை பற்றி பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்த பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‛‛அண்ணன் போன்டா மணிக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அவரின் மேல்சிகிச்சைக்கு உதவும் படி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து யாராவது அவருக்கு உதவுங்கள். இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சினிமா நடிகரானவர். எவ்வளவோ போராட்டத்திற்கு மத்தியில் கல்யாணம் செய்து, இரண்டு குழந்தைகளையும் படிக்க வச்சு, ஆளாகிட்டு இருக்கார். தயவு செய்து அவரை காப்பாத்துங்க நண்பர்களே. அனாதையாக இந்தியாவுக்கு வந்தார். அவர் குழந்தைகளை அனாதையாக போகக்கூடாது. முடிஞ்சதை செய்வோம். உதவுங்க'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.