கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து விக்ரம் நடித்த கோப்ரா படத்தையும் இயக்கினார். நீண்ட நாள் இந்த படம் தயாரிப்பில் இருந்தது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம் பலவித வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் மீது விக்ரம் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இதற்காக தென்னிந்தியா முழுக்க சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தினார்.
அஜய் ஞானமுத்து மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த விக்ரம், பல மேடைகளில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன். அந்த படம் விரைவில் துவங்கும் என்று அறிவித்தார். இதற்காக விக்ரம் தயாரிப்பாளரையும் தயார் செய்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கோப்ரா எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதோடு கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. 3 ஹீரோயின்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை, விக்ரமின் நடிப்பு என பல பாசிட்டிவான விஷயங்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் விக்ரம், அஜய் ஞானமுத்துவுடன் இணைய இருந்த அடுத்த படத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும், பா.ரஞ்சித் இயக்க விருக்கும் புதிய படத்திலும் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அஜய் ஞானமுத்துவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கி இழந்த இமேஜை காப்பாற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். என்கிறார்கள்.