பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
10 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது கணவர் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தனுஷ் நண்பராக நடித்திருந்தார். பள்ளி பருவ காதலை சொன்ன இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியும் இடம் பெற்றிருந்தது. அது விமர்சனத்தையும் சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடலும் உலகம் முழுக்க ஹிட்டாகி சாதனை படைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி மீண்டும் ஆந்திராவில் தெலுங்கு பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். திரையிட்ட தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு புதுப்படத்திற்கு நிகராக படம் ஒடுவதை பார்த்து ஆந்திராவே வாயடைத்து நிற்கிறதாம்.
பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு என்.டி.பாலகிருஷ்ணாவோடு ஒரு படத்திலும், சிரஞ்சீவியோடு ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை விளம்பரப்படுத்தும் நோக்கோடு 3 படம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேப்போல் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்திலும் நடிக்கிறார். அதையொட்டியும் இந்த படத்தை வெளியிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
3 படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.