நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

10 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது கணவர் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தனுஷ் நண்பராக நடித்திருந்தார். பள்ளி பருவ காதலை சொன்ன இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியும் இடம் பெற்றிருந்தது. அது விமர்சனத்தையும் சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடலும் உலகம் முழுக்க ஹிட்டாகி சாதனை படைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி மீண்டும் ஆந்திராவில் தெலுங்கு பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். திரையிட்ட தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு புதுப்படத்திற்கு நிகராக படம் ஒடுவதை பார்த்து ஆந்திராவே வாயடைத்து நிற்கிறதாம்.
பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு என்.டி.பாலகிருஷ்ணாவோடு ஒரு படத்திலும், சிரஞ்சீவியோடு ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை விளம்பரப்படுத்தும் நோக்கோடு 3 படம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேப்போல் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்திலும் நடிக்கிறார். அதையொட்டியும் இந்த படத்தை வெளியிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
3 படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.