Advertisement

சிறப்புச்செய்திகள்

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினேகா படத்திற்கு தென்கொரியா விருது

09 செப், 2022 - 12:42 IST
எழுத்தின் அளவு:
South-Korea-Award-for-Sneha-movie-Shot-Boot-Three

சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, ஷிவாங்கி நடித்துள்ள படம் ‛ஷாட் பூட் த்ரீ'. கைலாஷ் ஹீத், சூப்பர் சிங்கர் ப்ரணிதி, வேதாந்த் மற்றும் 'மாஸ்டர்க் புகழ் பூவையார் உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களுடன் கோல்டன் ரெட்ரீவர்க் வகை நாய் மேக்ஸ் நடித்துள்ளது. ராஜேஷ் வைத்யா இசையமைத்திருக்கிறார். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு தென் கொரியாவில் நடக்க இருக்கும் சர்வதேச விலங்குள் பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் ஷாட் பூட் த்ரீ படம் திரையிடப்பட்டு விருதும் வழங்கப்பட இருக்கிறது. இந்த படம் ஒரு குடும்பத்திற்கும் அந்த குடும்பத்தாரால் வளர்க்கப்படும் ஒரு நாய்க்கும் உள்ள உறவைப் பற்றியதாகும்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் கூறியதாவது: இந்த செய்தியை கேட்டு நானும், எனது குழுவும் மிக மகிழ்ச்சி அடைந்தோம். ஷாட் பூட் த்ரீ, எழுத ஆரம்பத்தில் இருந்து திரைப்படமாக எடுத்து முடிக்கும் வரை, எங்களுக்குப் பல ஆச்சர்யங்களைத் தந்துள்ளது. இந்தப் படம் வெளியாவற்கு முன்பே, எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மேலும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது, என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர்களின் உதவியாளர்களுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்: எஸ்.ஆர்.பிரபாகரன் அதிர்ச்சி தகவல்நடிகர்களின் உதவியாளர்களுக்கு ரூ.25 ... ஜீவி 2ம் பாகம் ஓடிடியில் வெளியானது வருத்தமளிக்கிறது: அஸ்வினி சந்திரசேகர் ஜீவி 2ம் பாகம் ஓடிடியில் வெளியானது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)